மனித உரிமைகள் தினத்தில் விழிப்புணர்வு செயலமர்வு.

முல்லைத்தீவில் இன்றையதினம் மனித உரிமைகள் தினம் சிறப்பான முறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் பத்தாம் திகதி மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் இன்றையதினம் (10.12.2023) காலை 11 மணியளவில் முல்லைத்தீவு இலங்கை செஞ்சிலுவை சங்கம் மண்டபத்தில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுக்கான செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது .

குறித்த நிகழ்வில் சட்டத்தரணிகளான கு.கம்சன் , நா.மோகன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், இளைஞர்கள் மற்றும் நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest news

Related news