இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூர் அதிகாரச பைகளையும் கைப்பற்றுவதுடன், வட,கிழக்கு தமிழர் தாயகத்திலும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்கு, பொதுநோக்கு மண்டபத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கைச் செலுத்தியபின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டேன். நிச்சயமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகமான வட்டாரங்களில் வெற்றியீட்டி, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நான்கு உள்ளூர் அதிகாரசபைகளையும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றும்.
அத்தோடு வடக்கு, கிழக்கில் எமது இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்பதையும் திடமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்- என்றார்.