முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 1550குடும்பங்களைச் சேர்ந்த 4594 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இதன்காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 315 குடும்பங்களை சேர்ந்த 930 நபரும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 125 குடும்பங்களை சேர்ந்த 362 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 372 குடும்பங்களை சேர்ந்த 1078 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 582 குடும்பங்களை சேர்ந்த 1826 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 27 குடும்பங்களை சேர்ந்த 65 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 129 குடும்பங்களை சேர்ந்த 331 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் (30) பிற்பகல் வெளியிடப்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மக்கள் மீட்கப்பட்டு ஆறு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள 42, இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்


