கொக்குத்தொடுவாயில் யானை துரத்தியதில் மூவர் காயம்.

கொக்கு தொடுவாய் தெற்கு பகுதியில்  யானை துரத்தியதில் கண்ணிவெடி அகற்றும்  மூன்று பெண் பணியாளர்கள் காயமடைந்த  சம்பவம் இன்று (20.01.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் தெற்கு கிராமேசேவகர் பிரிவிற்குட்பட்ட  வேம்படி சந்தியில் இருந்து   வெலிஓயா செல்லும் பாதை பகுதியில்  காட்டுப்பகுதிக்குள்  கண்ணிவெடி பிரிவை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர்.   குறித்த பகுதியில் திடீரென யானை ஒன்று  வந்து துரத்தியுள்ளது.
யானை துரத்தியதை  கண்டவுடன் பயத்தில் பணியாளர்கள் ஓடியுள்ளனர் அதன் போது  3 பெண் பணியாளர்கள்  காயமடைந்துள்ளார்கள்.
பின்னர் காயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Latest news

Related news