கொட்டும் மழையிலும் பயிர்நிலங்களை யானைக் கூட்டங்கள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றது.

தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விவசாய நிலங்கள். நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில். முல்லைத்தீவில் நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை யானைகள் கூட்டம் கூட்டமாக நின்று பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

இதனால் வெள்ளத்தில். மூழ்கிய பயிர் நிலங்கள் மேலும் காட்டு யானைகளால் அழிவடையும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்


