தண்ணிமுறிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.

தண்ணிமுறிப்புகுளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பெரும்பான்மையினருக்கும் குறித்த பகுதி மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதனால் பெரும்பான்மையினத்தை சேர்ந்த 27 பேரையும் , அப்பகுதியை சேர்ந்த மீனவர்களை விசாரணைக்கென அழைக்கப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்றையதினம் பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.பார்த்தீபன் தலைமையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மீனவர்களை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

கடந்த (04.08) அன்று தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட குமுழமுனை தண்ணிமுறிப்பு மக்களுக்கும், ஹிச்சிராபுரம் மக்களுக்குமே அனுமதி உள்ள நிலையில் வெலிஓயா பகுதியிலிருந்து வந்த பெரும்பான்மையினர் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதை தொடர்ந்து மீனவ சங்கத்தினருக்கும் பெரும்பான்மையின மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 38 சிங்கள மொழிபேசும் மீனவர்களையும் , அவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் குறித்த பகுதி மக்களால் ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களில் ஒன்பது பேர் பொதுமக்களால் பொலிஸாரிடம்ஒப்படைக்கப்பட்ட பின்னர் தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில். பதிவு செய்யப்பட்ட ஹிச்சிராபுரம், தண்ணிமுறிப்பு சங்கத்தினை சேர்ந்த மீனவர்களை விசாரணைக்கு என அழைக்கப்பட்ட நிலையில் 17 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

இதனையடுத்து இன்றையதினம் (08) குறித்த வழக்கு நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்போது இன , மத கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் என பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்ட பின்னர் 14 நாட்கள் தடுப்புகாவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Latest news

Related news