வடமாகாண மல்யுத்த போட்டியில் தங்க பதக்கங்களை தமதாக்கி சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்டம்

மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடத்தபட்ட வட மாகாண மல்யுத்த போட்டியானது முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் நேற்றையதினம் (06.04.2025) இடம்பெற்றிருந்தது.

குறித்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள், பெண்கள் அணியினர் 15 தங்க பதக்கங்களை பெற்றதுடன் தொடர்ந்து 6 வருடமாக 1ஆம் இடத்தினையும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

குறித்த போட்டியில் முல்லைத்தீவு 5 தங்கம், 3 வெள்ளி பதக்கத்தினை பெற்று, 1ஆம் இடத்தினையும், யாழ்ப்பாண மாவட்டம் 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கல பதக்கத்தினை பெற்று 2ம் இடத்தினையும், வவுனியா மாவட்டம் 2 தங்கம், 2 வெள்ளி , 2 வெண்கலம் பதக்கத்தினை பெற்று 3ஆம் இடத்தினையும் பெற்றிருந்ததோடு, பெண்கள் பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தினர் 10 தங்கம் 1 வெள்ளி பதக்கங்களை தமதாக்கியிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட வீரர்களுக்கான பயிற்சியை முல்லைத்தீவு மாவட்ட மல்யுத்த பயிற்றுனரும், வரலாற்று ஆசிரியருமான பி. ஜெயதர்சன் வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

Latest news

Related news