முல்லைத்தீவில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட ஐந்து படகுகளுடன் அறுவர் கைது

கொக்குதொடுவாய்  கடற்கரை பகுதியில் சட்டவிரோத முறையில்  சுருக்குவலை  தொழிலில் ஈடுபட்டிருந்த ஐந்து மீன்பிடி படகு,  இரண்டு சுருக்குவலைகளுடன் ஆறுபேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (21.05.2025) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு  கொக்குதொடுவாய்  கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்  தொழில் இடம்பெறுவதாக கடற்தொழில்    திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற கடற்தொழில்    திணைக்களத்தினர் , கடற்படையினர் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டிருந்த
ஐந்து மீன்பிடி படகுகளையும்,  இரண்டு தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சட்டவிரோத மீன்பிடிக்கு வெளிச்சத்தை பாய்ச்சிய படகுகள் பற்றிய விசாரணைகளை கடற்தொழில் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. அத்தோடு கைது செய்யப்பட்ட ஆறுநபர்களும் இன்றையதினம்  முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
புத்தள மாவட்டத்தை சேர்ந்த ஐந்து நபர்களும் கொக்குதொடுவாய் பகுதியை சேர்ந்த  ஒருவருமாக ஆறுபேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Latest news

Related news