ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள்
இன்று காலை பாடசாலை சென்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களும் தேன் பூச்சிகள் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள் கட்டிடம் ஒன்றில் தேன் பூச்சிகள் கூடுகட்டி இருந்துள்ளது. இன்றைய தினம் வலயமட்ட விளையாட்டுப்போட்டிகள் ஒட்டுசுட்டான் மகாவித்யாலய மைதானத்தில் இடம்பெற இருந்த இந்நிலையில் திடீரென தேன்பூச்சிகள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை துரத்தி குத்தியுள்ளது. இதனால் அச்சமடைந்த மாணவர்கள் பரவி பாய்ந்து ஒடியுள்ளனார்.
தேனீ கலைந்து குளவி கொட்டியதில் ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பாடசாலையின் மாடிக் கட்டிடம் ஒன்றில் பலகாலமாக தேன்பூச்சிகள் கூடுகட்டி வாழ்வதும் குறிப்பிடத்தக்கது.






