பாடசாலை வளாகத்திற்கு மாணவர்களை துரத்தி குத்திய தேன்பூச்சிகள். 63 நபர்கள் வைத்திய சாலையில் அனுமதி

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள்
இன்று (30.05.2025) காலை பாடசாலை சென்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேன் பூச்சிகள் குத்தியதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 63 நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள் கட்டிடம் ஒன்றில் தேன் பூச்சிகள் கூடுகட்டி இருந்துள்ளது. இன்றையதினம் வலயமட்ட விளையாட்டு போட்டிகள் ஒட்டுசுட்டான் மகாவித்யாலய மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகிய இந்நிலையில் திடீரென தேன்பூச்சிகள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை துரத்தி குத்தியுள்ளது. இதனால் ஆசிரியர், மாணவர்கள் உள்ளடங்கலாக 63 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆண் ஆசிரியர்கள் – 3
பெண் ஆசிரியர் – ஒருவரும்,
பெண் மாணவர்கள் 24,
ஆண் மாணவர்கள் 18 ஆக மொத்தம்
46 பேர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு ஒட்டிசுட்டான் வைத்தியசாலையில் பெண் ஆசிரியர்கள் 03,
ஆண் ஆசிரியர் ஒருவரும்
ஆண் மாணவர்கள் 9 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Latest news

Related news