முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைவர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்களால் தமிழரசுக்கட்சிக்கு எதிராக யாழ் மேன் முறையீட்டு நீதிமன்றில் முறையிடப்பட்ட வழக்கானது நாளையதினம் (17.06.2025) எடுத்துக்கு கொள்ளப்பட இருக்கும் நிலையில் சுமுகமான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
சமூக செயற்பாட்டாளரும், மூன்று மாவீரர்கள் , இரண்டு நாட்டுப்பற்றாளரின், மூன்று முன்னாள் போராளியின் சகோதரனுமான முல்லை ஈசனின் வேண்டுகோளுக்கிணங்க வழக்குகள் நீக்கப்பட வேண்டும், தமிழ் அரசு கட்சி நலன் கருதியும், மக்கள் நலன் கருதி தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் , வைத்திய கலாநிதி சிவமோகன் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று வவுனியாவில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இடம்பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தரப்பினரும், வைத்தியர் சிவமோகன் தரப்பினரும் தம்முடைய பிரச்சினைகளை நேருக்கு நேர் கலந்துரையாடி அதற்கமைவாக இரு தரப்பினரும் ஒத்துழைத்து
- மக்கள் நலன் கருதி வைத்திய கலாநிதி சிவமோகனால் போடப்பட்ட வழக்கினை வாபஸ் பெறுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.