ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மாங்குளம் பொது சுகாதார பிரிவிலுள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்றையதினம் (23) திடீர் பரிசோதனைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மாங்குளம் பொது சுகாதார பிரிவிலுள்ள கரிப்பட்டமுறிப்பு, ஒலுமடு பகுதிகளில்
உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் மீது இன்றையதினம் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு அழிப்பு செய்யப்பட்டதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் நதிருசன் தலைமையில் ஒட்டுசுட்டான் பொதுச்சுகாதார பரிசோதகர் டிலக்சன் மற்றும் முத்தையன்கட்டு பொது சுகாதார பரிசோதகர் லோஜிதன் ஆகியோர் இணைந்து குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடதக்கது.



