முள்ளிவாய்க்காலில் Clean Srilanka 

முள்ளிவாய்க்கால் கடற்கரையில்  கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இராணுவம், பொதுமக்கள் இணைந்து சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் இன்று (18.02.2025) காலை ஈடுபட்டிருந்தனர்.

ஆறாவது தேசிய பாதுகாப்பு படையணியின் இராணுவ கொமண்டர் மேஜர் கே.என்.சி.டீ.சில்வா அவர்களின் தலைமையில் ஆறாவது தேசிய பாதுகாப்பு படையணியின் இராணுவத்தினர் , பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில்

clean srilanka திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணியில்  ஈடுபட்டிருந்தனர்.
குறித்த சுத்தப்படுத்தும் பணியில் கிராம மக்கள், ஆறாவது தேசிய பாதுகாப்பு படையணியின் இராணுவத்தினர் இணைந்து சுத்தப்படுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.

Latest news

Related news