மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மூதாட்டி ஒருவருடைய சடலம் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இன்று (28.08.2025) காலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு 200 வீட்டுதிட்டம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வீட்டில் தனிமையில் வசித்து வந்த கோபாலன் குண்டுமணி 84 வயதுடைய பெண்மணியினுடைய சடலம் புதுக்குடியிருப்பு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டுவருவதுடன் குறித்த சடலத்தை முல்லைத்தீவு நீதவான் நேரடியாக பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் பொலிசாரால் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.
ஏற்கனவே 2021ம் ஆண்டு இளம் பெண்ணான நிதர்சனா என்ற இளம்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம் இடம்பெற்ற குறித்த பகுதியிலே இவ் மூதாட்டியின் மரணம் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மரணம் எவ்வாறு இடம்பெற்றது? கொலையா? மரணத்திற்கான காரணம் என்ன? பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.