வற்றாப்பளையில் சிறுவன் சடலமாக மீட்பு . தீவிர விசாரணையில் பொலிஸார்.

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில்  சிறுவன் ஒருவன் நீர் நிலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில்  இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை தந்த குறித்த சிறுவன் நேற்றையதினம் (25.02.2025) காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து இன்றையதினம் தேடுதல் நடத்திய போது அருகில் இருந்த நீர் நிலை ஒன்றில் இருந்து இன்று (26.02.2025)  காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில்
16 வயதுடைய சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் கொலை செய்யப்பட்டு நீரில் வீசப்பட்டானா? அல்லது விபத்தா என்ற கோணத்தில் முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

Related news