அரச அங்கீகாரம் பெற்ற வட பிராந்தியத்திற்கான Reliance நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளை முள்ளியவளை பகுதியில் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு 

வட பிராந்தியத்திற்கான Reliance நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளையானது உத்தியோக பூர்வமாக முள்ளியவளை பகுதியில் நேற்றையதினம் (30.05.2025) திறந்து வைக்கப்பட்டது.

மங்கள வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு கிளையினை உத்தியோக பூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து . மங்கள விளக்கு ஏற்றப்பட்டு வரவேற்பு நடனத்துடன் இடம்பெற்றிருந்தது.

விரிவான கடன் வசதிகள், லீசிக் வசதிகள், தங்க நகைகளுக்கான அதிகூடிய முற்பணத்தினை வழங்குகின்ற அரச அங்கீகாரம் பெற்ற Reliance நிறுவனத்தின் திறப்பு விழாவில் மேலதிக மாவட்ட செயலாளர் அவர்களினால் வாகனத்தை பெற்று கொண்டவருக்கான திறப்பு கையளிக்கப்பட்டதுடன் கலந்து கொண்ட அதிதிகளுக்கான நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு கிளை முகாமையாளர் இராமநாதன் சதீஸ் தலைமையில் இடம்பெற்ற கிளை திறப்பு விழா நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் குணபாலன் , கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜெயக்குமார், தலைமை நிர்வாக அதிகாரி சதுரங்க ராஜசிங்க, நிறுவனத்தின் செயலாளர் திருமதி சலனி துஷானி , முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அபேவரத்ன, முள்ளிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி றுவண் தரங்க, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய செயலாளர் கமலகாந்தன், வைத்தியர் சுவேந்திரன், வங்கி முகாமையாளர், கட்டட உரிமையாளர், நிறுவனத்தின் ஏனைய கிளை ஊழியர்கள் , நிறுவனத்தின் ஊழியர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Latest news

Related news