ஆலய கேணியில் தவறி வீழ்ந்த இரு மாணவிகள் பரிதாபகரமாக உயிரிழப்பு. 

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியினை இன்றையதினம் (01.06.2025) பார்க்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியினை பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட மூன்று யுவதிகளில். இரு யுவதிகள் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர் . இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல் மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

Related news