புதுக்குடியிருப்பில் அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். கைப்பற்றப்பட்ட வண்டு மொய்த்த உணவு பொருட்கள்.

தேவிபுரம் உடையார்கட்டு பகுதியில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்ட சம்வம் ஒன்று இன்றையதினம் (04) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு பகுதியில் கடைகள் மீது ரொஜிஸ்ரன், பிரதாஸ், மற்றும் மேற்பார்வை சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை நடவடிக்கையுடன் டெங்கு ஒழிப்பு தொடர்பான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த சோதனை நடவடிக்கையில் வண்டு மொய்த்த பொருட்களும் கைப்பற்றப்பட்டதோடு உரிமையாளர்களின் அனுமதியோடு குறித்த பொருட்கள் அழிக்கப்பட்டது.

அத்துடன் டெங்கு தொடர்பான பொலித்தீன் பாவனைக்குட்பட்ட வர்த்தகர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர்களிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

Latest news

Related news