எனக்கு உதவி செய்யாவிட்டாலும் என்னைபோல் கிராமத்தில் பல பெண்கள் கஸ்டப்படுகின்றார்கள். அவர்களுக்காவது உதவி செய்யுங்கள்.
மக்களின் அழுகுரல். செவிசாய்ப்பார்களா அதிகாரிகள்.

எனக்கு உதவி செய்யாவிட்டாலும் என்னைபோல் எமது கிராமத்தில் நிறைய பெண்கள் கஸ்டப்படுகின்றார்கள். அவர்களுக்காவது உதவி செய்யுங்கள் என நாவற்காடு கிராமத்தில் கிராம சேவையாளரால் பாதிக்கப்பட்ட
மக்கள் கண்ணீர் மல்க ஊடகங்களுக்கு இன்றையதினம் (14) கருத்து தெரிவித்தனர்.

முள்ளியவளை வடக்கு நாவற்காடு. கிராம சேவகர் பிரிவில் வசிக்கும். மக்கள் முள்ளியவளை வடக்கு நாவற்காட்டு கிராமசேவகர் மீது. குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முள்ளியவளை வடக்கு நாவற்காடு கிராம சேவகர் பிரிவில் 385 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் உண்மையாகவே வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை நேரடியாக பார்வையிடவில்லை எனவும், வெள்ள அனர்த்த நிவாரணம் வழங்குவதிலும். முறைகேடுகள் இடம்பெறுகிறது எனவும் முள்ளியவளை வடக்கு நாவற்காடு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் மக்கள் குறித்த பகுதி கிராம சேவகர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கும் போது. முள்ளியவளை வடக்கு நாவற்காடு கிராம சேவகர் பிரிவில் 385 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்., அண்மையில் பெய்த மழையால் எம் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. அதனை எமது கிராம சேவையாளர் நேரில் வந்து. பார்வையிடவில்லை. அவரது கையாட்களை வைத்து தமக்கு பிடித்தவர்களின் பெயர் விபர பட்டியலை எடுத்து. மாவட்ட செயலகம் ஊடாக கொடுப்பனவுகளை வழங்கியுள்ளார். இதனை தட்டி கேட்டால் பொலிஸாரை வரவழைத்து மிரட்டுகின்றார். இதேபோன்று ஒரு பிரச்சினையை தட்டிகேட்க சென்ற இருவர் மீது தற்போது வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட அரச அதிபருக்கோ, பிரதேச செயலாளருக்கோ தெரியாது.
கிராம அலுவலருக்கு தேவை நிமித்தம். தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாது. அவருக்கு பிடித்த ஆட்களுக்கே சலுகை வழங்கப்படுகின்றது. நாவற்காடு கிராமத்தில் பெண்தலைமைத்துவ, வறிய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.எமக்கு பயணம் செய்வதற்கு கூட ஒரு பாதை இல்லை. குளம் உடைத்து. பயணம் செய்ய முடியவில்லை .அதனை சீர்செய்யவோ எம் கிராமத்தினை பார்வையிடவோ யாரும் வரவில்லை. எம் கிராம சேவையாளரின் செயற்பாட்டால் மன உளைச்சலிற்கு உள்ளாகி இருக்கின்றோம். ஆகவே இதனை கருத்தில் எடுத்து எமக்கு சரியான தீர்வினை வழங்கவேண்டும் என தெரிவித்திருந்தனர்.



