வவுனியாவில் அண்மையில் சில நாட்களாக மலேரியா நோய் தடுப்பு செயற்றிட்ட நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் கடந்த மூன்று நாட்களாக சாந்தசோலைப் பகுதியிலுள்ள வீடுகள், கிணறுகள், சுற்றுப்பகுதிகள் என்பன கண்காணிப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இந்தியா ஐயப்ப மலைக்குச் சென்று திரும்பிய பக்தர்களிடம் மலேரியா நோய் நோற்று இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் அவ்வாறு இருப்பின் சமூகத்தில் பரவாமல் இருப்பதற்காகவும் இந் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், பொதுமக்கள் தமது இருப்பிடங்களைத் துப்பரவு செய்து வைத்திருக்குமாறும் தமது பகுதியில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டால் அவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இந் நடவடிக்வடிக்கைக்கு பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.