முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் எரிபொருள் நிரப்புவதற்கு நீண்ட வரிசையாக மக்கள் நிற்பதனை இன்றையதினம் (16.06.2025) அவதானிக்க கூடியதாக இருந்துள்ளது.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் தற்பாெழுது யுத்தம் நடந்து வருவதனால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப மக்கள் நீண்ட வரிசையாக குவிந்துள்ளனர்.