முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களின் விளையாட்டு , கலைத் திறமைகளை வளர்க்கும் நோக்கில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகள் பிரதி அமைச்சரால் வழங்கி வைப்பு.

முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களின் விளையாட்டு மற்றும் கலைத் திறமைகளை வளர்க்கும் நோக்கில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்வு இன்று (14) முல்லைத்தீவு ரோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண கல்வி, விளையாட்டு மற்றும் கலாச்சார அமைச்சின் நிதி பங்களிப்புடன் ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மின்னணு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகள் வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு சங்கத்திற்கு 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள உடற்கட்டமைப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 22க்கும் மேற்பட்ட விளையாட்டு, கலாச்சார நிறுவனங்கள் மற்றும் கலை சங்கங்களுக்கு இந்த விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகள் விநியோகம் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண கல்விச் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெயக்காந்(காணி) மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Latest news

Related news