புதுக்குடியிருப்பு நகரை தூய்மையாக்குவோம் எனும் தொனிப்பொருளில் புதுக்குடியிருப்பு நகர் பகுதிகளில் இன்றையதினம் (26.08.2025) சிரமதானப்பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு நகரை தூய்மையாக்குவோம் எனும் தொனிப்பொருளில் Clean srilanka திட்டத்தின் கீழ் மாதாந்தம் வரும் இறுதி செவ்வாய்க்கிழமைகளில் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் காலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் வழிகாட்டுதலுடனும் பங்களிப்புடனும் புதுக்குடியிருப்பு பிரதேசசபை, வர்த்தக சங்கத்தினர் இணைந்து புதுக்குடியிருப்பு நகரை தூய்மையாக்கும் நடவடிக்கையில் ஈடடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.